இந்த சாதனை "லௌகீக நிலையில்"
"நான்", "என்னால்", " என்னுடையது" என்ற "உடைமை", "உரிமை" அழிய, ஒரு சாதகன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் ஆகும்.
நித்திய சாதனை என்பது ஒரு மாணவன் நித்தம் அனுஷ்டிக்க வேண்டிய ஆரம்ப நிலை சாதனையாகும். இந்த உடல், உலக பந்தங்களில் விரக்தியுற்று,
"நான் யார்?", "உலகத்தின் உண்மைப் பொருள் என்ன?", "தெய்வம் எங்கே இருக்கிறது?, "என் துன்பத்திற்கு காரணம் எது?", "அத்துன்பத்திலிருந்து விடுபடும் வழி யாது?"
என தீராக்கேள்வியுற்று விடை தேட ஆரம்பிக்கும் சீடனுக்கு சாஸ்திரம் வழிகாட்ட ஆரம்பிக்கிறது. தீர்க்கமான அச்சாதகன் பன்னிரண்டு வருடம் சத்குருவிற்கு "ஸர்வாங்க சேவை" செய்தபின், அம்மாணவனின் நிலைகண்டு, சத்தியத்தை போதிக்கிறார். இந்த பாடத்தை உள்ளபடி உணர சாதகனுக்கு சுமார் ஆறு ஆண்டுகள் அவசியமாகிறது,
அப்படிப்பட்ட ஓர் உண்மைச் சாதகன் பின்பற்றவேண்டிய சாதனையாக ஸ்ரீ சத்குருதேவர் பரிந்துரைப்பது யாதெனில்?